ஸ்டாலின் கண்ட கனவு கானல் நீராகி விட்டது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்ட கனவு கானல் நீராகி விட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
x
திருப்பூரில் அம்ருத் மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டங்களுக்காக 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சபாநாயகர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதிமுக குறித்து குறை கூறி பேசி வருவதாகவும், மக்களை குழப்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்