மக்களவை தேர்தலில் போட்டியிட வரும் 25ம் தேதி முதல் விருப்பமனு - திமுக அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
x
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில்,  திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள், வரும்  25-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம் என்றும், விண்ணப்ப கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்