"கடந்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்த கட்சி பாஜக" - ப.சிதம்பரம்

கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மறந்து விட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
x
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மறந்து விட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சென்னை திருவான்மியூரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, எம்.எல்.ஏ. விஜயதாரணி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ​பங்கேற்று பேசிய சிதம்பரம், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 15 கோடி ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி கொண்டுவர உள்ளதாக கூறினார்.​ திராவிட கட்சி என்பதை மறந்து விட்டு, பாஜக வளர அதிமுக துணை நிற்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்