தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் 35-க்கும் மேற்பட்டவர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் - அமித்ஷா

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் 35 -க்கும் மேற்பட்டவர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என,  பா.ஜ.க.வினருக்கு அக்கட்சி தலைவர் அமித்ஷா அறைகூவல் விடுத்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு  வரும் அமித்ஷா ராமநாதபுரத்தில் இன்று  வாக்குச் சாவடி பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் நடந்த  பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் 35 -க்கும் மேற்பட்டவர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணியை அனைவரும் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும் என்றும் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்