நாடாளுமன்ற தேர்தல் : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணியை முறியடிக்கவே தி.மு.க கூட்டணியில் இணைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தி.மு.க தொகுதிப் பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருப்பதாக தெரிவித்தார்.
Next Story