நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை - மக்களிடம் கருத்து கேட்கும் தி.மு.க

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க, பொதுமக்களிடம் தி.மு.க கருத்து கேட்டுள்ளது.
x
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க, பொதுமக்களிடம் தி.மு.க கருத்து கேட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான யோசனையை மின்னஞ்சலில் அனுப்பலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் தி.மு.க-வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாநிலத்திற்கு சேவை செய்வோம் என ஸ்டாலின் அந்த பதிவில் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்