கிரண்பேடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார் - நாராயணசாமி

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
x
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகவும், இலவச அரிசி, பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்தும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறும் இப்போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். 39 கோப்புகளுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறிய முதலமைச்சர் நாராயணசாமி, கிரண்பேடி சர்வாதிகாரி போல செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்