பதவியேற்ற பிறகு முதன் முறையாக உத்தரபிரதேசம் சென்றார் பிரியங்கா காந்தி

கட்சி பொறுப்பேற்ற பிறகு, உத்தர பிரதேசத்துக்கு பிரியங்கா காந்தி வதேரா முதன் முறையாக சென்றார்.
பதவியேற்ற பிறகு முதன் முறையாக  உத்தரபிரதேசம் சென்றார் பிரியங்கா காந்தி
x
காங்கிரஸ் கட்சியில், உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக லக்னோ சென்ற பிரியங்காவுக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு பிராந்திய பொதுச் செயலர், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரும் சென்றனர்.  விமான நிலையத்தில் இருந்து கட்சியின் தலைமை அலுவலகம் வரை, 3 பேரும், தொண்டர்கள் சூழ பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.  வரும், 14ம் தேதி வரை, உத்தரபிரதேசத்தில்தங்கி இருந்து கட்சி பணிகளை பிரியங்கா மேற்கொள்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்