காட்பாடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டுவரப்படும் - துரைமுருகன் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காட்பாடிக்கு அனைத்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டுவரப்படும் என துரைமுருகன் உறுதி.
x
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது சொந்த தொகுதியான காட்பாடிக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்தார். இங்கு ஏழைகளுக்கு இலவச மருத்துவம் கிடைக்கப்போவது உறுதி என்றும் துரைமுருகன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்