பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி இணைய வேண்டும் - ஒ.பன்னீர்செல்வம்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம், தேனி மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார். கூட்டணி குறித்து நல்ல முடிவு எட்டியவுடன் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ஒ.பன்னீர்செல்வம் கூறினார்.
Next Story