உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு

கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜிவ் குமார் கைது செய்யப்பட மாட்டார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது, தங்களுக்கு கிடைத்த வெற்றி என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு
x
கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜிவ் குமார் கைது செய்யப்பட மாட்டார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது, தங்களுக்கு கிடைத்த வெற்றி என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் தர்ணா போராட்ட மேடையில் பேசிய அவர், நீதித்துறை மீது தங்களுக்கு என்றும் நம்பிக்கையும், மரியாதையும் இருப்பதாக தெரிவித்தார். விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என ராஜிவ்குமார் கூறியதே இல்லை என சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தங்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி என கூறினார். இதன் மூலம் மேற்குவங்கத்தில் நிகழ்ந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்