கொடநாடு விவகாரம் : "குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கம் தேவை" - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொடநாடு விவகாரம் : குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கம் தேவை - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை
x
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க சார்பில் அளிக்கப்பட்ட மனுவை மத்திய அரசுக்கோ, குடியரசுத் தலைவருக்கோ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அனுப்பி நடவடிக்கை எடுத்தாரா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமுக மனு மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அறிக்கையில் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்