கொடநாடு விவகாரம் : பின்னணியில் தி.மு.க. - அமைச்சர் ஜெயக்குமார்

சயன், மனோஜ் இருவருக்கும் திமுகவை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் ஆஜரானதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
கொடநாடு விவகாரத்தில், பின்னணியில் திமுக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் தொடர்புடைய சயன், மனோஜ் இருவருக்கும் திமுகவை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் ஆஜரானதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் தோல்வியடைந்ததால் திமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்ததாகவும், ஆனால் அவர்கள் முகத்திரை கிழிந்துவிட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.   அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்