50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
x
மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வந்து 25 ஆண்டுகளாகியும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரால், மத்திய அரசின் துறைகளில் தங்களது உரிமையை பெற முடியவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.  முற்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டினை அளிக்க காட்டும் வேகத்தில் ஒரு சதவீதம் கூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க பிரதமர் மோடி, அவசரம் காட்டவில்லை என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். மத்திய அரசின் ஒரு துறையில் கூட, 27 சதவீத இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெறவில்லை என தமது அறிக்கையில், மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்