இலங்கை கடற்படை நடவடிக்கைக்கு முதலமைச்சர் கண்டனம்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும், அரசு எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
இலங்கை கடற்படை நடவடிக்கைக்கு முதலமைச்சர் கண்டனம்
x
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும், அரசு எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினர் விரட்டியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழக மீனவர்கள் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், இந்த விபத்தில் உயிரிழந்த மீனவர் முனியசாமி குடும்பத்துக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்