இலங்கை கடற்படை நடவடிக்கைக்கு முதலமைச்சர் கண்டனம்
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும், அரசு எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும், அரசு எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினர் விரட்டியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழக மீனவர்கள் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், இந்த விபத்தில் உயிரிழந்த மீனவர் முனியசாமி குடும்பத்துக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Next Story