ஸ்டாலின் கிராம பயணம் - முதலமைச்சர் விமர்சனம்

திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் ஆதாயத்திற்காக கிராமம் கிராமமாக செல்கிறார் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
x
திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் ஆதாயத்திற்காக கிராமம் கிராமமாக செல்கிறார் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை அரியனூர் மற்றும் மகுடஞ்சாவடியில் 90 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலங்கள் கட்டும் பணிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பல்வேறு அரசு துறைகள் சார்பில் 40 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது கிராமம் கிராமமாக செல்லும் திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது செல்லாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்