அரசியலில் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளேன் - ஸ்டாலின், திமுக தலைவர்

அண்ணாவின் 110வது பிறந்த நாளை ஒட்டி, திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
x
அண்ணாவின் 110வது பிறந்த நாளை ஒட்டி, திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்டோர் பரிசுகளை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அரசியலில் அடிப்படையில் இருந்தே தான் மேலே வந்ததாகவும், மாணவர்களும் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்