"மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் சரியில்லை" - கார்த்திக், மனித உரிமை காக்கும் கட்சி

நடிகர் கார்த்திக், தனது கட்சியின் புதிய பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
x
நடிகர் கார்த்திக், தனது கட்சியின் புதிய பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த நிலையில், தற்போது அதற்கு 'மனித உரிமை காக்கும் கட்சி' என்று பெயரை மாற்றியுள்ளார். நெல்லையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் புதிய பெயரையும், கொடியையும் கார்த்திக் அறிமுகம் செய்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் சரியில்லை என்று விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்