சிறையில் சசிகலாவிடம் 2 - வது நாள் விசாரணை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 - வது நாளாக விசாரணை நடத்தினர்.
சிறையில் சசிகலாவிடம் 2 - வது நாள் விசாரணை
x
வீரராகவன் தலைமையில், 7 அதிகாரிகள் குழு, காலை 9.30 மணிக்கு சிறைக்குள் சென்றனர். இடைவிடாது மாலை 6.30 மணி வரை, சசிகலாவிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் , பல்வேறு கேள்விகளை கேட்டு, பதிவு செய்து கொண்டனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர் இல்லங்களில் நடைபெற்ற சோதனையின்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், இந்த விசாரணை நடத்தப்பட்டது. 2 நாள் விசாரணை முடிந்து விட்டதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் அனுமதி பெற்று சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்