"அமமுகவை சீண்டுவது மின்சாரத்தை தொடுவதற்கு சமம்" -தொண்டர்களுக்கு தினகரன் கடிதம்

அமமுகவை சீண்டுவது, உயர் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம் என, அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் எச்சரித்துள்ளார்.
அமமுகவை சீண்டுவது மின்சாரத்தை தொடுவதற்கு சமம் -தொண்டர்களுக்கு தினகரன் கடிதம்
x
* அமமுகவை சீண்டுவது, உயர் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம் என, அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் எச்சரித்துள்ளார். 

* இது குறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், அமமுக துவங்கிய நாளில் இருந்து இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக கூறியுள்ளார். 

* மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து இந்த விஸ்வரூப வளர்ச்சியை, பெற்றிருப்பதாகவும், இதற்காக அச்சுறுத்தல்களையும் அராஜகங்களையும் எதிர்கொண்டதாகவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* சுயநலனுக்காக, ஒரு சில நபர்களோ, ஒரு சிறு குழுவோ, விலகி சென்றால், கட்சியே முடங்கி விடும் என எண்ணினால்,  பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடும் என நினைப்பது போலாகும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

* மேலும், அமமுகவை சீண்டுவது, உயர் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம் என, அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்