"தமிழர்களின் பிரச்சினைகளை டெல்லிக்கு எடுத்து சென்றவர் ஆளுநர் பன்வாரிலால்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

"பாரதியாரை போன்று, தமிழர்களின் பிரச்சினைகளை டெல்லிக்கு எடுத்து சென்றவர் ஆளுநர் பன்வாரிலால் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பிரச்சினைகளை டெல்லிக்கு எடுத்து சென்றவர் ஆளுநர் பன்வாரிலால் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
பாரதியாரின் 136-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில், பாரதி திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு பாரதி விருது வழங்கி, ஆளுநர் கவுரவித்தார். அமைச்சர்கள், மா பா. பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாரதி ஆங்கிலேயர்களிடன் இருந்து நம்மை காப்பாற்றியது போல, தமிழக ஆளுநர், தமிழகர்களின் பிரச்சனைகளை டெல்லி கொண்டு சென்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்