மேகதாது அணை விவகாரம் : வரிகொடா இயக்கம் நடத்த தயார் - ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் வஞ்சகம் தொடர்ந்தால் காந்தியடிகள் வழியில் வரிகொடா இயக்கம் நடத்த தயார் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் : வரிகொடா இயக்கம் நடத்த தயார் - ஸ்டாலின்
x
கட்சி தொண்டர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் தாயாக உள்ள காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழகத்திற்குள் பிரதமர் வர முடியாத நிலை உருவாகும் என திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். 

காவிரி ஆறு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி, மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது பச்சை துரோகம் எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மத்திய அரசின் இந்த வஞ்சகம் தொடர்ந்தால்  ஆங்கிலேயரை  எதிர்க்க காந்தியடிகள் காட்டிய வழியில் வரிகொடா இயக்கம் நடத்த தயாராக இருப்பதாக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்