மின் கட்டணத்திற்கான ரசீதுகள் கொடுக்கப்படாது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் குறிச்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
x
அரிசி, உடைகள் உள்ளிட்ட 27 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ எஸ் மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் ஊழியர்கள் மறு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் மின் கட்டணத்திற்கான ரசீதுகள் கொடுக்கப்படாது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்