8 வழிச்சாலை:தென்னை மரங்களுக்கு ரூ.50000! கஜா புயல் பாதித்த தென்னை மரங்களுக்கு ரூ.600..? அன்புமணி

சேலம் எட்டு வழிச்சாலை வழித்தடத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு ரூ.50000 கொடுக்கும் அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு வெறும் 600 ரூபாய் மட்டும் கொடுப்பது ஏன் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
x
சேலம் எட்டு வழிச்சாலை வழித்தடத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கும் தமிழக அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு வெறும் 600 ரூபாய் மட்டும் கொடுப்பது ஏன் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எதுவும் கிடைக்காது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்