"ஓட்டு போடாமல் வந்து கோரிக்கை வைப்பது ஏன்?" - பொதுமக்களிடம் அதிமுகவினர் கேள்வி
தங்களுக்கு ஓட்டு போடாமல் வந்து கோரிக்கை வைப்பது ஏன் என கேள்வி கேட்ட அதிமுகவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி அரசு பள்ளியில் கூடுதல் கட்டுமானப் பணிக்கு, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், கொங்கராயகுறிச்சி ஆற்றுப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்ற அரசு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக அங்கு வந்த பொதுமக்கள் சண்முநாதனை சந்தித்தனர்.
அப்போது, அவருடன் வந்த அதிமுகவினர், "நீங்கள் யாரும் எங்களுக்கு ஓட்டுப்போடவில்லை. பின்னர் ஏன் எங்களிடம் வந்து கேட்கிறீர்கள்" எனக் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Next Story