சர்கார் பட விவகாரம் - இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு சென்ற போலீசார்

சர்கார் பட விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு நேற்றிரவு போலீசார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்கார் பட விவகாரம் - இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு சென்ற போலீசார்
x
விஜய் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள  சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு நேற்றிரவு 
போலீசார் சென்றதால், அவர் கைது செய்யப்படக்கூடும் என்று தகவல் பரவியது. ஆனால் அது  வதந்தி என பின்னர் தெரிய வந்தது.  விருகம்பாக்கம் காவல் நிலையத்திருந்து 2 போலீசார் நேற்றிரவு பத்தரை மணியளவில் முருகதாஸ் வீட்டிற்கு  சென்றுள்ளனர். வீட்டில் முருகதாஸ் இல்லாததால் போலீசார் திரும்பி சென்று விட்டனர். அவர்கள் பாதுகாப்புக்காகவே முருகதாஸ் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சாலிகிராமம் பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த இயக்குனர் விக்ரமன், நடிகர் ரமேஷ் கண்ணா, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர் நேற்றிரவு முருகதாஸ் வீட்டிற்கு சென்றனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் வீட்டில் முருகதாஸ் இல்லை என்று  தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்