" அநியாயமான முறையில் சொத்துவரி கணக்கீடு "- டிடிவி தினகரன்
தமிழகத்தில், அநியாயமான முறையில் சொத்துவரி கணக்கீடு முறையை மேற்கொள்வதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், அநியாயமான முறையில் சொத்துவரி கணக்கீடு முறையை மேற்கொள்வதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். நிலத்தின் தற்போதைய மதிப்பை கணக்கில் எடுத்து, எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ அத்தனை வழிகளையும் பின்பற்றி, சொத்து வரியை உயர்த்தி நோட்டீஸ் வழங்கியிருப்பதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சொத்து வரி கணக்கிடும் முறையைக் கைவிடவேண்டும் எனவும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Next Story