"காய்ச்சல் உயிரிழப்புகளை அரசு தடுக்கவில்லை" - பூங்கோதை ஆலடி அருணா

டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலால் தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக பூங்கோதை ஆலடி அருணா குற்றம்சாட்டினார்.
காய்ச்சல் உயிரிழப்புகளை அரசு தடுக்கவில்லை -  பூங்கோதை ஆலடி அருணா
x
சென்னை மாதவரம் வடபெரும்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமினை அக்கட்சியின் மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் மருத்துவ அணி செயலாளர் என்.வி.என்.சோமு கனிமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய பூங்கோதை, டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலால் தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம்சாட்டினார். பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு ஊசிகள், மருந்துகள் இருந்தபோதும், மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மருந்துகளை  கொடுத்து நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்