அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் பணிகளில் அதிமுகவினர் தீவிரம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள அதிமுகவினர் , சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் பணிகளில் அதிமுகவினர் தீவிரம்
x
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், வேட்பாளர் யார் என்று தெரியாத நிலையில், தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக  அதிமுகவினர் சுவர் விளம்பரம் வரைந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக  பணம் கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். தற்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு தேர்தலை அரவக்குறிச்சி தொகுதி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்