"திருநாவுக்கரசருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" : டிஜிபி அலுவலகத்தில் காங்கிரசார் மனு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த மனுவை அளித்துள்ளனர். மற்ற தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு போலவே, திருநாவுக்கரசருக்கும் அவரது அலுவலகம், வீடு மற்றும் அவர் சுற்றுப் பயணம் செல்லும் இடங்களில் பாதுகாப்பு அளிக்குமாறு மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவை பரிசீலிப்பதாக, டிஜிபி உறுதி அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
Next Story