"திமுக ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது குற்றச்சாட்டு" - முதலமைச்சர் பழனிசாமி
திமுகவினர் மீதான ஊழல்களை மறைக்கவே அதிமுக ஆட்சி மீது குற்றம்சாட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக 47-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் பூலாவாரி பகுதியில், நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறினார். ஆனால், அதிமுக ஆட்சியில் வீராணத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டதையும் முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
Next Story