‘விரைவில் அறிக்கை வெளியிடுவேன்’: பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பேட்டி

MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக பல பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
‘விரைவில் அறிக்கை வெளியிடுவேன்’: பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பேட்டி
x
MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக பல பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அக்பர் ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டு இருந்ததால் அவரால் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலும், விளக்கமும் அளிக்க முடியவில்லை. மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது விடுத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை டெல்லி விமானநிலையத்தை வந்தடைந்த மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், தன்மீதான பாலியல் புகார்கள் குறித்து உரிய விளக்கத்தை வெளியிடுவேன் எனத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்