எம்.எல்.ஏ. கைது - சட்டமன்ற விதிகள் என்ன?

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், கைது குறித்து சபாநாயகர் தனபாலிடம், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.
எம்.எல்.ஏ. கைது - சட்டமன்ற விதிகள் என்ன?
x
* சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டால், சட்டமன்ற விதி 288, 289-ன் கீழ், அதற்கான காரணம், என்ன வழக்குகள் போடப்பட்டுள்ளன, அவர் எந்த சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்களை, சபாநாயகரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

* அதன் அடிப்படையில் கருணாஸ் கைது தொடர்பான விளக்கங்களை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நாளை சபாநாயகர் தனபாலிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர். 

* பின்னர் சபாநாயகரின் ஒப்புதலை பெற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கருணாஸ் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. 

* சட்டப்பேரவை கூடியிருக்கும் வேளையில் கைது நடந்தால், சட்டப்பேரவையிலே தெரிவிக்கப்படும் என்றும், சட்டப்பேரவை கூடாத நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தபால் மூலமாகவோ, செய்திக் குறிப்பு மூலமாகவோ தெரிவிக்கப்படும் எனவும் சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்