புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும் - ராமதாஸ்
புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய மாங்கனி அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தார். மணல் கொள்ளைக்கு உதவிய காவல்துறையினர் 200 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், வருவாய் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பாண்டில் நடைபெற்றுள்ள 15 வகையான ஊழல் குறித்து ஆளுநரிடம் முறையிட உள்ளதாகவும் ராமதாஸ் கூறினார்.
Next Story