பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மொத்த பட்ஜெட் மதிப்பில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறை மற்றும் புதிய பாடத்திட்டம் குறித்து முழுமையான பயிற்சி வழங்கப்படவில்லை எனவும் அன்புமணி கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மொத்த பட்ஜெட் மதிப்பில் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x
ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி, மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு உள்ளிட்ட டெல்லி அரசின் அதிரடி நடவடிக்கையால், அங்குள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறை மற்றும் புதிய பாடத்திட்டம் குறித்து முழுமையான பயிற்சி வழங்கப்படவில்லை எனவும் அன்புமணி கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4 சதவீதம் அல்லது மொத்த பட்ஜெட் மதிப்பில் 25 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஆசிரியர்களுக்கு பன்னாட்டு அளவிலான பயிற்சி, பள்ளிகளில் உலகத்தர கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாடத்திட்டத்தை உருவாக்கி அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்