யாருக்கும் பயந்து அ.தி.மு.க. அரசியல் செய்யவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அ.தி.மு.க.வினர் யாருக்கும் பணிந்தவர்கள் கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், யாருக்கும் பயந்து அ.தி.மு.க. அரசியல் செய்யவில்லை என்றும், அ.தி.மு.க.வை ஏளனமாக பார்ப்பவர்களை எதிர்க்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கட்டளையிட்டால் யாரை வேண்டுமானாலும் எதிர்க்க அ.தி.மு.க.வினர் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story