கல்லூரிகளில் தொடரும் பாலியல் புகார்கள் யாரும் தப்ப முடியாது: அமைச்சர் அன்பழகன்

திருவண்ணாமலை கல்லூரி மாணவி விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதியளித்துள்ளார்.
கல்லூரிகளில் தொடரும் பாலியல் புகார்கள் யாரும் தப்ப முடியாது: அமைச்சர் அன்பழகன்
x
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக இருந்த நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 தற்போது திருவண்ணாமலையில், வேளாண் கல்லூரி மாணவி, உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்ததன் அடிப்படையில், உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் புகார்கள் குறித்து புதிய செயலர், மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அடுத்த வாரம் முக்கிய  ஆலோசனை நடத்த உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாணவி விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், யாரும் தப்ப முடியாது என்றும் அமைச்சர் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்