கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குவாதம் - திமுக,பா.ம.க வினர் போராட்டம்
விழுப்புரம் கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த கோரி திமுக வினர் மற்றும் பா.ம.க வினர் போராட்டத்தில் ஈடுட்டனர்.
விழுப்புரம் அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்கு சீட்டுகளை கிழித்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த கோரி திமுக வினர் மற்றும் பா.ம.க வினர் போராட்டத்தில் ஈடுட்டனர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story