வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் இரவில் வீடுகளில் தங்க வேண்டாம் - தம்பிதுரை

தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் - தம்பிதுரை உறுதி
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்  மக்கள் இரவில் வீடுகளில் தங்க வேண்டாம் - தம்பிதுரை
x
காவிரி ஆற்றில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அந்த பகுதியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை,  இனி வரும் காலங்களில், வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் இருக்க, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்