"திராவிட இயக்கத்தின் 3வது அத்தியாயம், கருணாநிதி" - கி.வீரமணி
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திராவிடர் கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திராவிடர் கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற ஊர்வலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையில் இருந்து தொடங்கி, வாலாஜா சாலை வழியாக கருணாநிதி நினைவிடத்துக்கு வந்து சேர்ந்தது. இதன்பின்னர், கருணாநிதிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, தாய்க்கழகமான திராவிடர் கழகம், திமுகவுக்கு எப்போதும் துணையாக இருக்கும் என்றார்.
Next Story