மதுக்கடைகளை மோடியால் மட்டுமே மூட முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில், திராவிட கட்சிகளால் மதுக்கடைகளை மூட முடியாது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளை மோடியால் மட்டுமே மூட முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்
x
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் தமிழ் மகள் தாமரை மாநாடு, மதுரையில் நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும் என தெரிவித்தார்.

"எதிர்க்கட்சிகளின் பிரசாரத்திற்கு கூட மோடி தேவைப்படுகிறார்"

மாநாட்டில் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்திற்கு கூட பிரதமர் மோடி தேவைப்படுவதாக தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்