நீர்ப் பங்கீடு வரையறையில் மத்திய அரசு அநீதி - கர்நாடக முதலமைச்சர்

நீர்ப் பங்கீடு தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள திட்டத்தில், கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப் போராட்டம் தொடரும் என்றும், கர்நாடக முதலமைச்சர் குமராசாமி தெரிவித்துள்ளார்.
நீர்ப் பங்கீடு வரையறையில் மத்திய அரசு அநீதி - கர்நாடக முதலமைச்சர்
x
பெங்களூருவில் உள்ள சக்தி பவனில், பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 
காவிரி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்டோம் என்று தெரிவித்த அவர், உள்நாட்டு நீர் பங்கீட்டு சட்டம் திருத்தி, திணிக்கப்பட்டுள்ளது என்றும், கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டினார்.

 இது தொடர்பாக, மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும், தங்களது சட்டப்போராட்டம் தொடரும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், குமாரசாமி கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்