தமிழக அரசியல் சூழல் குறித்து சோனியா காந்தியுடன் பேசினேன் - கமல் பேட்டி

தமிழகத்தில் நிலவும் அரசியல் அவலங்கள் குறித்து சோனியாகாந்தியுடன் பேசியதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
தமிழக அரசியல் சூழல் குறித்து சோனியா காந்தியுடன் பேசினேன் - கமல் பேட்டி
x
மக்கள் நீதி மய்யத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று கமல்ஹாசன் ஆஜரானார். அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை என்றும், நேரம் வரும்போது ஒருவேளை பேசலாம் என்றும் தெரிவித்தார். பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்களை கைது செய்வதை பார்க்கும்போது ஜனநாயகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுவதாக கமல்ஹாசன் குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்