18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று மதியம் தீர்ப்பு வெளியாகிறது.
தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்தநிலையில், வழக்கு விசாரணையின்போது அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி சுந்தர், மதுரை கிளையில் பணியாற்றி வந்தார். நேற்று நீதிபதி சுந்தர் சென்னை திரும்பி விட்டதால் தினகரன் ஆதரவு 18 எம். எல். ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. உயர்நீதிமன்ற பட்டியலில் 7வது வழக்காக இது இடம்பெற்றுள்ளதால், மதியம் ஒரு மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story