மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம் - நவம்பர் 14 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ள அனுமதி
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கியது.
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கியது. ஆனால் இம்முறை கோயிலுக்குள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் இரண்டாயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் நவம்பர் 14 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி திறக்கப்படும் கோயில் நடை 41 நாட்கள் மண்டலபூஜை நிறைவுக்கு பிறகு டிசம்பர் 27 ஆம் தேதி நடை சாத்தப்படும் என தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story