கேரளாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 35,117 பேர் பாதிப்பு - முதல்முறையாக மருத்துவர் பலி
கேரளாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார்.
கேரளாவில் இதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 535 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த தனியார் மருத்துவரான ஆப்தீன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த திங்களன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் அறிகுறியும் காணப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story