நடிகை கங்கனா ரணாவத் மகாராஷ்டிரா மாநில ஆளுநருடன் சந்திப்பு - நீதி கிடைக்கும் என நம்புவதாக கருத்து

இந்தி நடிகை கங்கனா ரணாவத் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினர்.
நடிகை கங்கனா ரணாவத் மகாராஷ்டிரா மாநில ஆளுநருடன் சந்திப்பு - நீதி கிடைக்கும் என நம்புவதாக கருத்து
x
நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார். இதையடுத்து அவருக்கும் ஆளும்கட்சியான சிவசேனாவுக்கும் வார்த்தை போர் வெடித்தது.இதையடுத்து பாந்திரா பாலிஹில்லில் உள்ள  கங்கனாவின் பங்களாவில் சட்டவிரோத புதுப்பிப்பு பணிகள் நடந்ததாக கூறி மும்பை மாநகராட்சி அதை இடித்து தள்ளியது.  இதனைத்தொடர்ந்து கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை ராஜ் பவனில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்