கேரள தங்க கடத்தல் வழக்கு : கேரள தலைமை செயலகத்தில்என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அம்மாநில தலைமை செயலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய பிரதிகளான சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தங்க கடத்தல் தொடர்பாக தலைமை செயலகத்திற்கு சிவசங்கரனை சந்திப்பதற்காக சுவப்னா சுரேஷ் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், என். ஐ.ஏ. விசாரணை குழு அங்கு சோதனை நடத்த அனுமதி கோரியிருந்தது. தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், கேரள தலைமை செயலகத்தில், கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான சி.சி.டி.வி. பதிவுகளையும், சில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வெளிநாடு பயணங்கள் தொடர்பான கோப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story