கொரோனா பரவலுக்கு காரணம் மக்களே - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு

நாட்டில் கொரோனா பரவலுக்கு காரணம் மக்கள் தான் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டி உள்ளார்.
கொரோனா பரவலுக்கு காரணம் மக்களே - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு
x
நாட்டில் கொரோனா பரவலுக்கு காரணம் மக்கள் தான் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஒரு மது பாட்டில் வாங்க முண்டியத்துக் கொண்டு செல்வதாகவும், அரசு கோரிக்கை விடுத்த பின்னரும் சமூக இடைவெளி இன்றி விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் செல்வதுமாக உள்ளனர் என , மக்களின்  நடவடிக்கைகளை  கிரண்பேடி சாடியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆயிரக்கணக்கில் செலவு செய்வதாகவும், வரியே கட்டாமல் பலர் அரசு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்