பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த தந்தை - நண்பர்களுடன் சேர்ந்து மகளின் வாழ்க்கையை சிதைத்த கொடூரம்

கேரளாவில் பெற்ற மகளை தன் நண்பர்களுடன் சேர்ந்து தந்தை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த தந்தை  - நண்பர்களுடன் சேர்ந்து மகளின் வாழ்க்கையை சிதைத்த கொடூரம்
x
கேரளா - கர்நாடக எல்லையில் உள்ள காசர்கோடு மாவட்டத்திற்குட்பட்ட நீலேசுவரம் பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு  மாணவியை அவரது தந்தை பல மாதங்களாக பாலியல் வன்முறை செய்து வந்துள்ளார். மேலும் தன் நண்பர்களுக்கும் மகளை இரையாக்கி உள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்ததோடு கருக்கலைப்பும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சிறுமிக்கு நடக்கும் கொடூரத்தை அறிந்த அவரது மாமா, காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவே, நடந்த அத்தனை சம்பவங்களும் தெரியவந்தது. தன் கணவரின் செயல்களுக்கு எல்லாம் மனைவியே உடந்தையாக இருப்பதும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, தாய் அவரது நண்பர்கள் உட்பட 4 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். உறவினர் வீட்டில் சிறுமி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்